முன்னணி நிறுவனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து பணி நிறுத்தம் செய்து வருகின்றனர். இது டெக் ஊழியர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்குறைப்பு:
கொரோனா காலத்தில் முன்னணி நிறுவனங்கள் பல தங்களிடம் பணிபுரிந்தவர்களை வேலை விட்டு நிறுத்தியது. சிலருக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்பையும் வழங்கியது. ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் வேலையில் இருந்து ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்து வருகிறது. இதனால் டெக் ஊழியர்கள் கடும் பீதியில் உள்ளனர்.
AIASL விமான நிறுவன வேலைவாய்ப்பு 2024 – 77 காலிப்பணியிடங்கள் || நேர்காணல் மட்டுமே…!
இதுவரை, 186 தொழில்நுட்ப நிறுவனங்கள் 49,386 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமேசான் மற்றும் மீட்ட போன்ற நிறுவனங்களும் அடங்கும். வேகமாக மாறிவரும் பொருளாதார சூழலுக்கு ஆட்குறைப்பு கட்டாயமானது என்றும் நிறுவனங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் நிதி செயல்திறனை மேம்படுத்துவதற்கும் செலவுக் குறைப்பு உத்திகளை கையாள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதாலும் ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.