தமிழகத்தில் சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை – ஜன.15ம் தேதி வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது. இதில் சிறுபான்மையின மாணவா்களுக்கு உதவி செய்ய கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை தற்போது நீட்டித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி செலவினங்களுக்காக குறிப்பிட்ட உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்த அரசு உதவித் தொகையை பெற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு முதல் பி.எச்டி. உள்ளிட்டவற்றை படித்து கொண்டு இருப்பவராக இருத்தல் வேண்டும்.
பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் குஷி!
அத்துடன் இதனை பெற சிறுபான்மையின மாணவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் மதங்களைச் சாா்ந்தவராக இருத்தல் வேண்டும். மேலும் சிறுபான்மையின மாணவ, மாணவியரிடமிருந்து 2021-22 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை ஜனவரி 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஆளுநர் விளக்கம்!
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து கல்வி நிலையங்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேசியக் கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபாா்ப்புகளை மேற்கொள்ளும். அதன்படி தகுதியான சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.