முழு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 26க்கு பிறகும் நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!!
டெல்லியில் கடந்த ஒரு வாரமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல் 26க்கு பிறகும் மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று வணிகர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள்:
தேசிய தலைநகரான டெல்லியில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 24,331 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 348 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 11 நாட்களில் டெல்லியில் மட்டும் கொரோனா தொற்றின் காரணமாக 2,100 பேர் உயிரிழந்துள்ளனர்.
NCRTC கழகத்தில் ரூ.2 லட்சம் மாத ஊதியத்தில் பணி – ஏப்ரல் 26 இறுதி நாள்!!
டெல்லியில் கொரோனா தொற்றின் பரவல் மிக தீவிரமாக இருந்த காரணத்தால் கடந்த ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் அதிக கட்டுப்பாடுகளுடன் கண்காணிக்கப்படுகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நேற்று 35க்கும் மேற்பட்ட வணிக கழகங்கள் இணைந்து கொரோனா தொற்று பரவல் குறித்த கூட்டத்தை நடத்தியுள்ளனர். அதில், கொரோனா தொற்றின் பரவல் சங்கிலியை உடைப்பதற்காக ஏப்ரல் 26ம் தேதிக்கு பிறகும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும், இது குறித்து டெல்லியில் முதல்வர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் அவர்களுக்கு ஏப்ரல் 26ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டி கடிதம் எழுதியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்