தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் தீவிரமாக அதிகரித்து உள்ள ‘மெட்ராஸ் ஐ’ – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருகிறது. மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
மெட்ராஸ் ஐ
தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மெட்ராஸ் ஐ பரவ தொடங்கியுள்ளது. மேலும் இதில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெண்படல சுழற்சி எனப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காற்று மூலமாக வேகமாக பரவக் கூடியது. அதனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டாமென்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனை தொடர்ந்து இதுவரை தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘மெட்ராஸ் ஐ’ நோயின் அறிகுறிகளான கண்ணில் உருத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர், வீக்கம் ஆகியவை உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உங்களின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் தங்களை 4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமாக மற்றவர்களுக்கு இந்நோய் பரவுவதிலிருந்து பாதுகாக்க முடியும்.
நீங்கள் பான் கார்டு வைத்துள்ளீர்களா? – அப்போ இதை உடனே செய்யுங்க.. முக்கிய எச்சரிக்கை வெளியீடு!
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மெட்ராஸ் ஐ நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக மருந்தகங்களில் கண் மருந்து வாங்க வேண்டாம் எனவும் மருத்துவர்களை அணுகி அவரின் ஆலோசனையின்படி மருந்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.