விஜே சித்ராவுக்கு ஹேம்நாத்துடன் திருமணம் நடக்கவில்லை? போலீஸ் அதிகாரியின் ஷாக் ரிப்போர்ட்!

0
விஜே சித்ராவுக்கு ஹேம்நாத்துடன் திருமணம் நடக்கவில்லை? போலீஸ் அதிகாரியின் ஷாக் ரிப்போர்ட்!
விஜே சித்ராவுக்கு ஹேம்நாத்துடன் திருமணம் நடக்கவில்லை? போலீஸ் அதிகாரியின் ஷாக் ரிப்போர்ட்!
விஜே சித்ராவுக்கு ஹேம்நாத்துடன் திருமணம் நடக்கவில்லை? போலீஸ் அதிகாரியின் ஷாக் ரிப்போர்ட்!

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு, ஹேம்நாத்துடன் திருமணம் ஆகவில்லை என்று காவல்துறை அதிகாரி கொடுத்துள்ள ஷாக்கிங் ரிப்போர்ட் இந்த வழக்கில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சித்ரா மரணம்

சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் மரணம் தொடர்பான சில ஊகங்களும், சர்ச்சைக்குரிய விஷயங்களும் ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான வண்ணம் இருந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் பிரபல நடிகை சித்ரா. அவர் மரணமடைந்தது முதல் இன்று வரைக்கும் அவரது இறப்பிற்கான காரணங்கள் விதவிதமாக சொல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில், சித்ராவின் மரணத்திற்கு பின்னால் அரசியல் பிரமுகர்கள் இருப்பதாக கணவர் ஹேம்நாத் சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

லட்சுமிக்கு உண்மை தெரிந்ததை கண்டுபிடித்த சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த திருப்பம்!

மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கும் என்றும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார். ஆனால், சித்ராவின் வழக்கில் இருந்து தப்பிக்க ஹேம்நாத் பொய் சொல்வதாக நடிகையின் தாயார் குற்றம் சாட்டி இருக்கிறார். மறுபக்கத்தில், சித்ராவின் மரணத்தில் கணவர் ஹேம்நாத்துக்கும் முக்கிய பங்கு உண்டு என்று நடிகையின் தோழி ஒருவர் கூறி இருக்கிறார். இதில் எது உண்மை என்று தெரியாமல் குழம்பி போய் இருக்க, விஜே சித்ராவுக்கு கல்யாணமே ஆகவில்லை என்றும் ஹேம்நாத் பொய் சொல்கிறார் என்றும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், ‘நடிகை சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் சூளைமேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்ததாக கூறி இருக்கிறார் ஹேம்நாத். மேலும், அந்த திருமணத்தை பதிவு செய்ததாகவும் சொல்கிறார். ஆனால் சூளைமேட்டில் அப்படி ஒரு ஹோட்டல் இல்லவே இல்லை. இது குறித்து நடிகை சித்ராவின் பெற்றோர்கள் ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஆனால், போலீஸ் அதிகாரிகள் ஹேம்நாத்துடன் சேர்ந்து உண்மையான தகவல்களை மறைக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். உண்மையில், சித்ரா இறந்து போவதற்கு முன்னாள் வரைக்கும் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது மட்டுமே அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது. ஆனால், அவரது மரணத்திற்கு பிறகு தான், ஹேம்நாத் சித்ராவை திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்பட்டது. இப்போது இந்த தகவலும் போலியானது என காவல்துறை அதிகாரி கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!