விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5ல் களமிறங்கும் சன் டிவி கண்மணி சேகர்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் “பிக் பாஸ் 5” நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு செய்தி வாசிப்பாளர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இந்த ரியாலிட்டி ஷோவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக ஜனவரி மாதம் முதல் தான் சீசன் 4 ஒளிபரப்பப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் முதல் சீசன் 5 ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ தொடர்ந்து வெளி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழலில் போட்டியில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்த விவரம் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.
பிரபல இயக்குனருடன் இணையும் “குக் வித் கோமாளி” அஸ்வின் – வெளியான தகவல்!!
அதில் விஜய் தொலைக்காட்சி பிரபலமான பிரியங்கா, டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, நடிகர் அஸ்வின், மிலா, சீரியல் நடிகை பிரியா ரமணன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது போட்டியில் பங்கேற்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தற்போது மேலும் ஒரு போட்டியாளர் குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரோஜா மீது தாய் பாசத்தை காட்டும் செண்பகம், ரசிகர்கள் நெகிழ்ச்சி – இன்றைய எபிசோட் ப்ரோமோ!
அது சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி பிக் பாஸ் 5 போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த முறை சன் டிவியின் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா கலந்து கொண்டார். அதே போல இந்த முறை அவரை போலவே கண்மணி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கண்மணி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் இது வெறும் வதந்தி தான் என்று கூறி வருகின்றனர்.