தமிழக அரசு வேலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!
அரசு வேலை பெற்று தருவதாக மோசடி கும்பல் ஈரோடு பகுதியை சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே பணம் கொடுத்து அரசு வேலை பெற வேண்டாம் என காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பணமோசடி:
அரசு வேலை பெறுவதை கனவாக கொண்டு இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை குறிவைத்து மோசடி கும்பல்கள் ஏமாற்றி வருகின்றனர். தங்களுக்கு அனைத்து அரசு துறை உயா் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறையின் அரசியல் பிரமுகர்களை தெரியும் என கூறி அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!
அதை நம்பி அரசு வேலை பெற்றுவிட வேண்டும் என எண்ணுபவர்கள் குறி வைத்து லட்சகணக்கில் பணம் பெற்று ஏமாற்றுவதாக கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் கூறியதாவது, அரசு வேலைகள் அனைத்தும் முறையாக எழுத்து, நோ்முகத் தோ்வுகள் மூலமே நடத்தப்பட்டு தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகின்றனா்.
அரசு பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா தொற்று எதிரொலி!
எனவே இதுபோன்ற மோசடி நபர்கள் கொடுக்கும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது போன்ற செயல்களுக்கு பணம் கொடுப்பவர் மற்றும் பணம் பெறுபவர்கள் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்த தகவல்களை காவல் துறைக்கு 96552-20100 என்ற எண்ணின் மூலம் தொடபு கொண்டு தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.