இந்தியாவில் புதிதாக பரவி வரும் XE வகை கொரோனா – மீண்டும் அமலுக்கு வருமா முழு ஊரடங்கு?
இந்தியாவில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதை இந்தியன் சார்ஸ்-கோவ் 2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம் ஆய்வகங்களின் கூட்டமைப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அதன் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
XE வகை கொரோனா
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. அதன் பின்னர் கடந்த வருடம் ஜனவரி மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை குறைய ஆரம்பித்த காரணத்தினால் அனைத்து நாடுகளும் ஓரளவு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொதுத் தேர்வுகள்
நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாக பரவக் கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு இந்த புது வகை வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் XE வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வந்தது.
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – OTT திட்டங்களுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!
இந்த நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி INSACOG நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது, அது என்னவென்றால், இந்தியாவில் XE கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மும்பை, குஜராத் ஆகிய மாநிலங்களை தொடங்கி தற்போது ஏப்ரல் 22 ஆம் தேதி கேரளத்திலும் இதே வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இறுதியாக இந்தியாவுக்குள் ஒமைக்ரான் மற்றும் XE வகை கொரோனா வைரஸ் நுழைந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்து விட்டது.