தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான புதிய நலவாரியம் – உறுப்பினர்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் அனுபமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
உறுப்பினர்கள் தேர்வு:
தமிழகத்தில் பெண்களுக்கென்று பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு அவர்களின் நல வாழ்வுக்கு உதவிகள் செய்யப்படவுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த வாரியத்தில் மேற்கண்ட நிலையில் உள்ள பெண்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சிகள் போன்றவைகளும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கல்வி தகுதி, மற்றும் பணி அனுபவங்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் உங்களுடைய புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
WFH ஊழியர்களே உஷார் – CIPD வெளியிட்ட ஆய்வின் தகவல் வெளியீடு!
Exams Daily Mobile App Download
அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தவறாமல் வரும் 31ம் தேதிக்குள் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரிய அலுவக முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தினை www.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்