தமிழகத்தில் மக்களுக்காக புதிய இணையதளம் அறிமுகம் – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!
சென்னையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இணையதள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பொதுமக்கள் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல வேலைகளை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள சேவை மையம்:
இன்றைய காலகட்டத்தில் இணையதளம் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. குறிப்பாக கொரோனா பரவியதற்கு பிறகு மக்கள் மக்கள் தொற்று அச்சத்தால் பெரும்பாலும் வீட்டிலிருந்தவாறு ஆன்லைன் வாயிலாகவே அனைத்து வேலைகளையும் முடிக்க விரும்புகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் முடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னையில் தாம்பரம் மாநகராட்சிக்கு https://tnurbanepay.tn.gov.in என்ற புதிய இணையதள சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் சேவை மையம் வாயிலாக தாம்பரம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி, தொழில் வரிகளை செலுத்தலாம்.
அதுமட்டுமல்லாமல் கட்டிட அனுமதி, பிறப்புச் சான்றிதழ் , இறப்புச் சான்றிதழ் பெறுதல், காலிமனை வரி பெயர் மாற்றம், கட்டிட அனுமதி போன்ற சேவைகளை பெறவும் விண்ணப்பிக்கலாம் என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் சேவைகளை இந்த இணையதளம் வாயிலாக பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.