Aadhar- EB இணைப்பு : புதிய Website அறிமுகம் – தமிழக மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது மின் வாரியம் இதற்காக புதிய இணையதளம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய இணையதளம்
தமிழகத்தில் மின் இணைப்பு பெற்றவர்கள் மற்றும் மின்சார மானியம் பெறுபவர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இதனை பொதுமக்கள் விரைவில் செய்வதற்கு வசதியாக பல்வேறு இடங்களில் அரசு சார்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும், கட்டண மையங்களிலும் இணைக்கலாம். அதன்படி இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை 51 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இனி ரேஷன் கடைகள் மகளிர் குழுக்களின் கைகளில்? மத்திய அரசின் புதிய திட்டம்!!
அதன்படி தற்போது மின் கட்டணம் செலுத்துவதுடன், புதிய மின் இணைப்பு, மின் இணைப்பின் பெயர் மாற்றம் ஆகியவற்றிக்காக இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதனால் சர்வர் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தனியாக இணையதளம் ஒன்றை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி https://adhar.tnebltd.org/