தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் பெற புதிய வழிமுறை? அமைச்சர் விளக்கம்!
நீர், காற்று, சூரிய ஒளி என அனைத்தின் மூலமாகவும் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் ஏற்படும் மின் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு அவ்வப்போது முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட உள்ளதாக ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
மின்சார தடை
மின்சாரம் தான் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகி விட்டது. ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்க முடிவது இல்லை. பெரும்பாலான நிறுவனங்கள் மின்சாரத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நீரின் மூலமாகவும் மின்சாரத்தை எடுக்கலாம். காற்றின் மூலமாகவும் மின்சாரத்தை எடுக்கலாம். சூரிய ஒளி, அனல் மின் என பலவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை வந்துவிட்டது. இருப்பினும், மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு அளவே இல்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது.
விரைவில் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் ஒரு நாளைக்கு மட்டுமே மின்சாரம் தயாரிக்க 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் அவ்வப்போது தடைபட்டு கொண்டிருக்கிறது. மின்சார பற்றாக்குறையை சமாளிக்க அவ்வப்போது தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், மின்சாரம் தயாரிக்க தேவையான நிலக்கரியை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியும் இருக்கிறது.
தமிழகத்திலேயே மின் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி களை உருவாக்கும் பணியும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அமைச்சர் கே என் நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவை மாநகராட்சி வளாகத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 263 புதிய பணிகளுக்கான தொடக்க விழாவில் அவர் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட உள்ளதாக ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.