தமிழகத்தில் பேருந்து நடத்துனர்களுக்கான புதிய எச்சரிக்கை – போக்குவரத்துறை சுற்றறிக்கை!
தமிழகத்தில் பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் இலவச பயண திட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் பயணிக்கும் பெண்கள் இலவச பேருந்துகளை இயக்கும் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதனையடுத்து போக்குவரத்து துறை சில முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலவச பேருந்து:
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது முதல்வர் முக.ஸ்டாலின் அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இலவச பேருந்து பயண திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இத்திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றுள்ளது. அத்துடன் பல மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் இருந்து வருகிறது. இந்த திட்டம் வந்த பிறகு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் போக்குவரத்து துறை வருவாய் இழப்பையும் சந்தித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் நடத்துனர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாகவும் இலவச பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே பேருந்து நிற்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதனையடுத்து ஒவ்வொரு பேருந்து டெப்போக்களிலும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஓட்டுநர் குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. மேலும் வயதான பெண்கள் இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.
முழு ஊரடங்கில் 12 மணி நேரம் தளர்வுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
அத்துடன் பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், கண்டக்டரின் விசில் கிடைத்த பின் கதவுகளை மூடிய நிலையில் தான் பேருந்தை இயக்க வேண்டும். அதனை தொடர்ந்து பேருந்து நிறுத்தம் வருவதை குரல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார்படுத்த வேண்டும். அதே போல நடத்துனர்கள் எப்போதும் பேருந்து இயங்கி கொண்டிருக்கும் போது, இரண்டு படிக்கட்டுகளும் அவருடைய பார்வையில் படும் படியான இடத்தில் இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி இறங்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.