PF கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம்!
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் படி ஒரு ஊழியரின் ஊதியத்தில் சுமார் 70 முதல் 80 சதவீதம் வரை அலவன்ஸ்களில் அதிக அளவில் தருவதற்கு அரசு பரிசீலித்து வருகிறது.
புதிய தொழிலாளர் சட்டம்:
மத்திய அரசு ஆகஸ்ட் 8, 2019 அன்று ஊதியங்களுக்கான குறியீடு 2019, மற்றும் தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020, சமூகப் பாதுகாப்புக்கான குறியீடு, 2020 மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு ஆகிய நான்கு தொழிலாளர் குறியீடுகளை செப்டம்பர் 29, 2020 அன்று அறிவித்தது. இதன் மூலம் ஊழியர்களின் PF கணக்கில் அதிக மாற்றங்கள் நடக்க உள்ளது. வருங்கால வைப்பு நிதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இந்தச் சட்டங்கள் மாற்றப் போகின்றன. மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் கொடுப்பனவுகள் இருக்கக்கூடாது.
10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2 முதல் தேர்வுகள் துவக்கம் – கால அட்டவணை வெளியீடு!
அதாவது அடிப்படை ஊதியம் மொத்த ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்று இந்த சட்டம் பரிந்துரைக்கிறது. பொதுவாக, முதலாளிகள் சம்பளத்தில் அலவன்ஸ் அல்லாத பகுதியை 50 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பதால், ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்தவுடன் முதலாளிகள் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். கிராஜுவிட்டி கொடுப்பனவுகள் மற்றும் வருங்கால வைப்பு நிதியில் பணியாளர்களின் பங்களிப்பு அதிகரிப்பதால், கையில் கிடைக்கும் சம்பளம் குறைந்து விடும்.
இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
ஆனால் கொரோனா தொற்று நோய் பாதிப்பிற்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை சந்தித்து உள்ளதாக, இந்த புதிய விதிமுறைகள் தங்களைப் பாதிக்கும் என்று வேலைத் துறை அச்சத்தில் உள்ளது. அரசு ஆலோசித்து கொண்டிருக்கும் மற்றொரு பெரிய மாற்றம், ஒரு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்துவது, ஆட்குறைப்பு அல்லது நிறுவனத்தை மூடுவதற்கு முன்னதாக அதன் அனுமதியைப் பெறுவதும் ஆகும் என்று செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், இந்த மாற்றம் ஊழியரின் கையில் கிடைக்கும் சம்பளத்தில் குறைத்து, ஆனால் அவர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு மற்றும் பணிக்கொடை உயர்த்தப்படும் மேலும், முதலாளிகளின் பங்களிப்பு PF ல் அதிக அளவில் இருக்கும்.