தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வீடுகளுக்கு விநியோகம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை நேரடியாக தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக தபால் துறையுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை:
தமிழகத்தில் 21,39,395 வாக்காளர்கள் உள்ள நிலையில் இந்த ஆண்டு வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது வீடுகளுக்கே இலவசமாக தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த தபால்துறையுடன் 5 ஆண்டுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தேர்வு ஆணையம் கையெழுத்திட்டுள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் வேண்டும் – மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம்!!
இந்த நடைமுறை 5 ஆண்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாகு கூறுகையில், “தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு கலர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக அஞ்சல் மூலமாக வீடுகளுக்கே நேரடியாக அனுப்பப்படுகிறது.
தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு – 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
இந்த திட்டம் வருகிற 5 ஆண்டுகள் வரை நடைமுறைப்படுத்தப்படும். புதிதாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. மேலும் வெளி மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கும் இந்த முறை மூலம் அடையாள அட்டை வழங்க திட்டம் உள்ளது. அவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை செயலாளர் தமிழகம் வருகிறார். ஆலோசனை கூட்ட முடிவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்