தமிழகத்தில் அக்.1 முதல் இலவச புதிய வாக்காளர் அட்டை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து வாக்காளர்களுக்கும் 01.09.2021 முதல் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் அட்டை:
இந்தியாவில் 18 வயது மேற்பட்டோருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேர்தலில் வாக்களித்து தனக்கான தலைவர்களை தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு குடிமக்களின் கடமையாகும். வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது ஓரிரு மாதங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர் அடையாள அட்டை முகாம்கள் நடத்தப்பட்டு புதிய வாக்காளர்களை சேர்ப்பர். மேலும் ஏற்கனவே உள்ள வாக்காளர்களுக்கு பெயர், இருப்பிட மாற்றம் போன்ற பதிவுகளை புதுப்பிப்பர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு – இன்றைய விற்பனை!
தற்போது இணையம் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பிப்பு செய்யும் வசதியும் உள்ளது. இந்த நிலையில் அனைத்து வாக்காளர்களுக்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அடையாள அட்டை வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியத் தேர்தல் ஆணையம் 22.06.2021 இல் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் CAA சட்டம் ரத்து – தமிழக சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட அறிவுரையினை செயல்படுத்திடும் விதமாக அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு தமிழகத்தில் உள்ள 342 அரசு இ-சேவை மையங்களிலும் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் 01.10.2021 முதல் நடைமுறைக்கு வரும். எனவே, அனைத்து வாக்களர்களும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.