தமிழகத்தில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் – அச்சத்தில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் - அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் - அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழகத்தில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் – அச்சத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதை சமாளிக்கவே சுகாதாரத்துறை திணறி வரும் இந்த நிலையில், மற்றொரு வைரஸ் காய்ச்சல் சென்னையில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த வைரஸ் காய்ச்சல் குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய வைரஸ் காய்ச்சல்:

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் மாஸ்க் அணியாமல் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், மற்றொரு புறம் வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. அதாவது சென்னையில் உள்ள நான்கு முக்கிய அரசு மருத்துவமனையில், காய்ச்சல் வார்டுகளில் 70 க்கும் அதிகமானோர் சாதாரண வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் 5 பேர் உட்பட 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார் மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர்.

PPF, NSC சிறு சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் மாற்றம்? மத்திய அரசு விளக்கம்!

மேலும், இந்த காய்ச்சல் வருவதற்கு என்ன காரணம் மற்றும் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி உள்ளார். குறிப்பாக, அண்மைக் காலமாகத் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், இதனால் இந்த காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதாக கூறுகிறார். மேலும் மழையில் நனைவதை தவிர்த்தல், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் போன்ற அடிப்படை விஷயங்களை பின்பற்ற வேண்டும், எளிதில் செரிக்கக்கூடிய உணவை சாப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்கள். இதையடுத்து சளி, காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தாலும், அவை இரண்டு நாட்களுக்குள் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் இதையடுத்து இணை நோய் உள்ளவர்கள் தாமதம் இன்றி மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!