அண்ணா பல்கலை புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் – ஆளுநர் நியமனம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய துணைவேந்தர்:
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா தன் பதவிக்காலம் முடிந்ததையடுத்து பதவி விலகினார். இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக தமிழக கவர்னர் சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதன்படி துணைவேந்தரை நியமிப்பதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆகஸ்ட் 9ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் 10 பேர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அதிகரிகளிடையே ஆலோசனை நடைபெற்று முடிவு எடுக்கபட்டது.
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு? விரைவில் அறிவிப்பு!
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வு துறை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவர் ஆசிரியர் பணியில் 33 ஆண்டு காலம் அனுபவம் வாய்ந்தவர்.
TN Job “FB Group” Join Now
மேலும் இவர் பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகள் நிர்வாக பொறுப்பில் இருந்தவர் ஆவார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர் வேல்ராஜ் 7 நாடுகளுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். இதுவரை 193 ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். டாக்டர் வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.