புதிய வாகனத்திற்கான பதிவு கட்டணத்தில் சலுகை – பிரதமர் மோடி அறிவிப்பு!
இந்தியாவில் பழைய வாகனத்தை அளிக்கும் போது ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழ் வைத்திருப்பவர்கள் புதிய வாகனம் வாங்கும் போது பதிவு கட்டணம் செலுத்த அவசியம் இல்லை என பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
பழைய வாகன சான்றிதழ்:
இந்தியாவில் பழைய வாகனங்களை பயன்படுத்துவதால் வாகனங்களில் உறுதி பாகங்கள் பழுதடைந்து அதிக புகை வெளியாகிறது. இது காற்றை மாசடைய செய்து சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க காலத்தால் பழமையான வாகனங்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து அகற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழைய வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்திய உள்நாட்டு விமான பயண கட்டணங்கள் 12.82% அதிகரிப்பு – மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
இதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாடும் குறைக்கப்படும். மேலும் பிரதமர் மோடி தேசிய வாகன அழிப்பு கொள்கையை தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் தகுதியற்ற வாகனங்களை சாலைகளில் இருந்து அகற்றி, வாகனங்களை நவீனமயமாக்க இந்த கொள்கை மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு அங்கமாக இருக்கும்.
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமல்!
பழைய வாகனத்தை அழிக்கும் போது ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை வைத்திருப்பவர்கள் புதிய வாகனம் வாங்கும் போது, பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை. இத்துடன் சாலை வரியில் அவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். மேலும் பழைய வாகனத்தை மாற்றுவதன் மூலம் பராமரிப்பு செலவு, பழுது பார்ப்பதற்கான செலவு, பழைய வாகனத்தில் எரிபொருள் திறன் ஆகியவை சேமிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.