இனி 1000 பேர் வந்தாலும் பிரச்சனை இல்லை – WhatsApp பயனர்களுக்கு வந்துள்ள நியூ அப்டேட்!
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் தனது பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப் குழு:
அண்மையில் வாட்ஸ் அப்பில் இன்ஸ்டாகிராம் செயலியை போன்று எமோஞ்சிகள் மூலம் பதிலளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தனியுரிமை பாதுகாப்பை அளிக்கும் வகையில் ரீட் ரெசிப்ட் மற்றும் மெசேஜ்களுக்கான புழு டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ் அப்பை ஓபன் செய்யும் ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களுக்கு காண்பிக்கும். இந்நிலையில் அதனையும் பயனர்கள் மறைத்து கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் அப் செட்டிங்ஸ் மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இண்டிகேட்டர் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்தலாம். மேலும் குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதியும் இனி வரவுள்ளது. அதனை தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. முன்னதாக 256 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில்அதன் எண்ணிக்கை 512 ஆக உயர்த்தப்பட்டது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2022 அறிவிப்பு – மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் நபர்களின் எண்ணிக்கையை தற்போது மேலும் உயர்த்த முடிவு செய்யபட்டுள்ளது. அதாவது இனி வாட்ஸ் அப் குரூப்களில் அதிகபட்சமாக 1024 வரை இணைந்து கொள்ள முடியும். முதலில் இந்த அப்டேட் வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன்களில் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த அம்சம் அதிகமான பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற WhatsApp குழுக்கள் வணிக பயன்பாடுகளுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்