Twitter பயனர்களுக்கு இனி வெவ்வேறு கலரில் டிக் – வெளியான முக்கிய தகவல்!
உலகம் முழுவதும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ட்விட்டர் செயலியில் தற்போது அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ட்விட்டரில் வழங்கப்படும் டிக் நிறம் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர்:
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். அத்துடன் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளும் பதவி விலகினர். இந்த நிலையில் எலான் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். அரசியல், சினிமா, விளையாட்டு போன்றவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என்பதற்கு அடையாளமாக ‘புளூ டிக்’ வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்டுவிட்களை எடிட் செய்யும் வசதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த புளூ டிக்கை பெற பயனர்கள் மாதந்தோறும் ரூ.1,600 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று எலான் மக்ஸ் தெரிவித்தார். இந்த நடவடிக்கை ட்விட்டர் பயனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ப்ளூ டிக் வழங்கப்பட்ட பிறகு 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் பயனரின் ப்ளூடிக் மீண்டும் பறிக்கப்படும் என்று கூறப்பட்டது.
Face Book, Instagram பயன்படுத்தும் இளம் வயதினர் – தீமைகளை தடுக்க விரைவில் புதிய அம்சம்!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது முக்கிய அறிவிப்பாக ட்விட்டரின் ப்ளூ டிக்கை வெவ்வேறு வண்ணங்களில் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தனிநபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரும் நாட்களில் கலர் கலராக டிக் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்த அறிவிக்கப்பட்ட தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.