திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி எல்லா இடங்களிலும் இலவச உணவு!
திருப்பதியில் உள்ள தனியார் உணவகங்கள் மூடப்பட்டு உணவு கோயில் சார்பாக அன்ன பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்
அன்னப்பிரசாதம்:
திருப்பதியில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து தினசரி முன்பதிவு அடிப்படையில் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் மீண்டும் அனைத்து பூஜைகளுக்கும் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – WHO எச்சரிக்கை!
திருப்பதியில் இன்று அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய, ஏழுமலையான் கோவிலில் கடந்த நிதியாண்டில் ரூ.3,000.76 கோடிக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போல இலவச தரிசனத்தில் விரைவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.230 கோடியில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
TNPSC முதல் UPSC தேர்வு வரை – படித்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!
அதனை தொடர்ந்து கோயில் சார்பாக அன்ன பிரசாதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் திருமலையில் உள்ள தனியார் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் முற்றிலும் மூடப்பட்டு உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சாதாரண பக்தர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் என அனைவருக்கும் அன்னப் பிரசாதம் மட்டுமே வழங்கப்படும். அறிவியல் மையம் அமைக்க 70 ஏக்கர் வழங்கப்பட்ட நிலையில், அதில் 20 ஏக்கர் மட்டும் அறிவியல் மையத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.