Twitter தளத்தில் இந்தியர்களுக்கான புதிய அப்டேட் – அறிவிப்பு வெளியீடு!
டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் Twitter பக்கத்தில் இருந்து நேரடியாக செய்தியை வாட்ஸ் அப்பிற்கு அனுப்பும்படியான புதிய அப்டேட்டை கூடிய விரைவில் Twitter வெளியிட இருக்கிறது.
வாட்ஸ்அப்:
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது கிட்டத்தட்ட இந்தியாவில் மட்டுமே 487 மில்லியன் பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் விவரங்களை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால் மில்லியன் கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பயனர்களின் வசதிக்கு தகுந்தாற்போல் அவ்வப்போது அப்டேட்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
கடந்த மூன்று வாரங்களாக அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட்டபடியே இருந்து வருகிறது. இன்னும் பல அப்டேட்கள் கூடிய விரைவில் வர இருக்கிறது. அதற்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மைக்ரோ பிளாக்கிங் தளமாக ட்விட்டர் தளம் வாட்ஸ்அப் நிறுவனத்தில் அதிகமான பயனர்கள் இருப்பதால் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நேரடியாக செய்தியை வாட்ஸ் அப்பிற்கு அனுப்பும் படியான புதிய சோதனையை செய்து வருகிறது.
Police ஆகுறது உங்களோட கனவா? இதோ இந்த வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க!
Exams Daily Mobile App Download
மேலும், உலகளாவிய ட்விட்டர் பயனர்களின் எண்ணிக்கையில் 7% பயனர்கள் மட்டுமே ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக ட்விட்டர் தளத்தில் செய்தியை வாட்ஸ் அப்பிற்கு நேரடியாக அனுப்பும் படியான வாட்ஸ்அப் பொத்தானை ட்விட்டர் பரிசோதித்து வருகிறது. மேலும், இந்த ட்விட்டரின் புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைக்கு இந்திய பயனர்களுக்கு மட்டுமே இந்த புதிய அப்டேட்டை ட்விட்டர் தளம் வெளியிட இருக்கிறது. கூடிய விரைவில் இந்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்