வாட்ஸ்அப்பில் நடக்கும் புது வகையான மோசடிகள் – அரசு எச்சரிக்கை!
அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் தற்போது புது விதமான மோசடிகள் நடந்து வருவதாக மக்களை அரசு எச்சரித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் மோசடிகள்:
சமூகத்தில் உயர்நிலையில், உயர் பதவிகளில் இருக்கும் நபர்களின் புகைப்படங்களை இணையத்தில் இருந்து எடுத்து, அதனை வாட்ஸ்அப் DP ஆக வைத்து, போலியான சிம் கார்டு மற்றும் மெய்நிகர் தொலைபேசி எண்களை பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் குறித்து தற்போது அதிக புகார்கள் பெறப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நிர்வாக ரீதியாகவும், நிதி உதவிகளையும் கேட்டு மோசடி நபர்கள் மக்களுக்கு செய்திகளை அனுப்புகின்றனர். இதேபோல், ஆன்லைன் பணப் பரிமாற்றம் அல்லது ஆன்லைன் பரிசு அட்டைகளை வாங்கவும் கோரிக்கை வைக்கின்றனர்.
இவர்களை நம்பி பணத்தை அனுப்பி ஏமாந்து விட்ட பின்னர் தான் இது மோசடி கும்பலின் சதி என்பது தெரியவருகிறது. இதுபோன்ற செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான அறிக்கையில், தெரியாத நபர்களிடமிருந்து பணத்தை மாற்றவோ அல்லது பரிசு அட்டைகளை வாங்கவோ வேண்டாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, OTP, CVV எண் அல்லது பாஸ்வேர்டு போன்ற வங்கி விவரங்களை வாட்ஸ்அப்பில் பகிர வேண்டாம்.
தேசிய திறனாய்வு தேர்வு திடீரென நிறுத்தம் – NCERT வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்குகளையோ அல்லது ஆப்களையோ இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும், டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பாதுகாத்து கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மோசடி செய்பவரிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் வந்தால், அதை உடனடியாக உள்ளூர் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மக்களை எச்சரித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்