கேரளாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ் – 85 குழந்தைகளுக்கு வைரஸ் உறுதி! அதிர்ச்சிகர தகவல்!
கேரள மாநிலத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கொசுக்கடியால் பரவும் சிக்கன்குனியாவால் பின்விளைவாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தக்காளி வைரஸ்:
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவி தன்மையை கொண்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கைகள் எதிர்பாராத அளவு உயர்ந்தது. அதனை தொடர்ந்து இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவ தொடங்கியது. மேலும் கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைய தொடங்கியது. அந்த வகையில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ் உலக நாடுகளையே ஆட்டி படைத்தது.
மெகா சங்கமத்தில் கோபியின் திருட்டுத்தனம் வெளிப்படுமா? – பாக்கியலட்சுமி சீரியல் ட்விஸ்ட்!
அதன் தொடர்ச்சியாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கியது. இதன் தாக்கத்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து கேரளாவிலும் மூன்று கொரோனா அலைகளும் கடுமையாக மக்களை தாக்கியது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக குழந்தைகளிடையே தக்காளி எனும் புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது.
திடீரென காய்ச்சல், உடல் வலி, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தக்காளி காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.