மீண்டும் புதிய வகை வைரஸ் பரவல் – மருத்துவர்கள் எச்சரிக்கை!
இலங்கை நாட்டில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் புதிய வகையான இன்புளுவன்சா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்புளுவன்சா வைரஸ்
இந்த இன்புளுவன்சா வைரஸ் இலங்கை நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தான் கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் மீண்டு வந்த நிலையில், தற்போது இன்புளுவன்சா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏ வகை, பி வகை, சி வகை என மூன்று வகையான இன்ஃபுளுவென்சா வைரஸ்கள் மக்களைத் தாக்குகின்றதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோய் தாக்கத்தினால் அதிக அளவில் பெண்கள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நோய் தொற்றின் முக்கிய அறிகுறிகள் வாந்தி, அதிக காய்ச்சல், மூக்கு வடிதல் , தொண்டை வலி, தசை வலி, தலைவலி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த இன்புளுவன்சா வைரஸ்க்கு பாதிப்படைந்த இரண்டு நாட்களிலே இந்த அறிகுறிகள் தென்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் காற்று அல்லது இருமல் வழியாக அதிகம் பரவுவதாகவும் கூறப்படுகிறது.
1 முதல் 5 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மருத்துவர்கள் அறிவிப்பு!
இலங்கை நாட்டில் உள்ள இரத்தினபுரி கலவானை பிரதேசத்தில் இந்த இன்புளுவன்சா நோய் வேகமாக பரவி வருவதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இன்புளுவன்சா நோய் தாக்கத்தால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஜூன் மாதத்தில் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 75 பெண்களும், 16 ஆண்களும், 12 சிறார்களும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்