கொரோனாவை அடுத்து புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவல் – கடுமையாகும் கட்டுப்பாடுகள்!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரானின் புதிய வகை திரிபான பிஏ.2 வகை தொற்று அதிகம் பரவுவதே என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனாவால் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசின் சில கட்டுப்பாட்டு நடவடிக்கையாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பல மாநிலங்களில் நிலைமை சரியாகி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்து இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன் படி கொரோனா வேகமெடுக்க காரணம் உருமாறிய கொரோனா வைரஸான ஒமைக்ரானின் புதிய வகை திரிபான பிஏ.2 வகை தொற்று அதிகம் பரவுவதே என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வகையில் துணை திரிபான பிஏ.2.38 வகை வைரஸ் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இருக்கும் வைரஸை விட இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் ஆனால் இந்த தொற்றால் பாதிப்பு அதிகமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிஏ.2 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல் வலி, தொண்டை வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஏ.2.38 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 23 சதவீதம் பேருக்கு சளி, 17 சதவீதம் பேருக்கு உடல்வலி, 15 சதவீதம் பேருக்கு தொண்டை வலி, 13 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – யோகா பயிற்சி வகுப்புகள்! முதல்வர் அறிவிப்பு!
இந்தியா முழுவதும் தற்போது குஜராத், டெல்லி, கர்நாடகா, அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த உருமாறிய வகை தொற்று பரவல் தான் இந்த மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை தொற்றால் பாதிப்பு குறைவாக இருந்தாலும் எந்த அளவிற்கு இதன் தாக்கம் இருக்கிறது என்பதை பார்க்க பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.