பள்ளி குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை காய்ச்சல் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!
நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வரும் நிலையில் கேரளா மாநிலத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தக்காளி காய்ச்சல்:
கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பல மாநிலங்களில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து படிப்படியாக மக்கள் மீண்டு வரும் நிலையில் பள்ளி குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு பக்கம் உருமாறிய கொரோனா வைரஸின் ஓமிக்ரான் தொற்றின் பிஏ 5 வகை வைரஸ் பரவல் அதிகமாக பரவி வருகிறது. மேலும், மறுபக்கம் 5 வயது குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கேரளா மாநிலம் இடுக்கியில் நெடுங்கண்டம் கல்லார் பகுதியில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளியில் 20 குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து அந்த குழந்தைகளை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
பொதுவாக 5 வயது குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று தான் என்றாலும் தற்போது 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்யின் அறிகுறிகளாக கை, கால் மற்றும் வாயின் உள்பகுதியில் சிறு கொப்பளங்கள் மற்றும் வலி ஆகியவை ஏற்படும். இந்த நோய் ஏற்பட்டாலும் தானாகவே ஒரே வாரத்தில் சரியாகிவிடும் எனினும் இது அதிகம் பரவும் தன்மை கொண்டது எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.