தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் – மீண்டும் அமலுக்கு வருமா முழு ஊரடங்கு?
தமிழகத்தில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அதனை தொடர்ந்து இவ்வாறு பரவி வரும் தகவல் தவறு என்று கூறி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
புதிய வகை கொரோனா வைரஸ்:
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. அதன் பின்னர் கடந்த வருடம் ஜனவரி மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை குறைய ஆரம்பித்த காரணத்தினால் அனைத்து நாடுகளும் ஓரளவு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொதுத் தேர்வுகள்
நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாக பரவக் கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு இந்த புது வகை வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் XE வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், உருமாறி வரும் கொரோனா குறித்து மாறி மாறி தகவல்கள் வந்து கொண்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் XE போன்ற வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை. BA 2 ஒமைக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது என தெரிவித்தார்.
மேலும் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிதாக பரவி வரும் XE வைரஸ் தொற்று குறித்து பீதி அடையத் தேவையில்லை. தமிழகத்தில் உருமாறிய XE வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.