தமிழகத்தில் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா தொற்று? குடும்பத்தில் அனைவருக்கும் பரவும் அபாயம்!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா தொற்று? குடும்பத்தில் அனைவருக்கும் பரவும் அபாயம்!
தமிழகத்தில் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா தொற்று? குடும்பத்தில் அனைவருக்கும் பரவும் அபாயம்!
தமிழகத்தில் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா தொற்று? குடும்பத்தில் அனைவருக்கும் பரவும் அபாயம்!

தமிழகத்தில் தற்போது பரவி வரும் உருமாற்றம் அடைந்த வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாக பரவ கூடியது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

தமிழகம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் தற்போது தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு தற்போது 10,000 ஐ தாண்டியுள்ளது. சில மாதங்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுப்பதால் இது நான்காம் அலை பாதிப்புகள் என்று கூறப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா 4 -ம் அலை பரவக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. தற்போது பரவி வரும் BA 4, BA5 வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ கூடிய வீரியமுடையது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உருமாற்றம் அடைந்த வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாகவும் பரவும் தன்மை கொண்டது.

ஜூலை மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவரை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் வரக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 24 மணி நேரமும் தடுப்பூசி போடக் கூடிய வகையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!