தமிழகத்தில் ஒருவருக்கு புதுவகை கொரோனா உறுதி – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!

0
தமிழகத்தில் ஒருவருக்கு புதுவகை கொரோனா உறுதி - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் ஒருவருக்கு புதுவகை கொரோனா உறுதி - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!
தமிழகத்தில் ஒருவருக்கு புதுவகை கொரோனா உறுதி – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் BA4 பரவியது கண்டறியப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும் ஏதோ ஒரு இடத்தில் தானே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது, எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா ஒருவருக்கு உறுதி:

கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அந்த வகையில் டெல்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

உலகளவில் பரவி வரும் புதிய வகை கொரோனாவான BA4 வகை வைரஸ், முதன்முறையாக ஹைதராபாத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்த வந்த நிலையில் தற்போது நாவலூரில் தாய், மகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இது எந்த வகையான கொரோனா தொற்று என மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ந்தனர். அதில் தாய்க்கு பிஏ 2 வகை ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும், மகளுக்கு பிஏ 4 வகை ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாநில பள்ளிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை கோடை விடுமுறை – கல்வித்துறை புதிய உத்தரவு!

கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான தாய், மகள் இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு, அவர்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை, தற்போது இருவருக்கும் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்து உள்ளது. இந்த வகையான நோய் தொற்றுக்கு, தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் ஜூன் 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!