கேரளாவில் பரவும் புதிய வகை நோரோ வைரஸ் – தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு புதிய வகை நோரோ வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவுறுத்தல்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார்.
புதிய வைரஸ்:
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து கடும் பாதுகாப்பு மற்றும் தொற்று நோய் தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றால் தொடர்ந்து கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்து, சமீபத்தில் தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், இன்னும் ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு நிலை குறையாமல் தீவிர நிலையிலேயே உள்ளது.
சிவகங்கையில் நாளை (நவ.14) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
அதில், கேரளா மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வருவதற்கு அதிக சிரமமாக இருந்தது. அதிக அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு மிக சமீபத்தில் தான் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அங்கு குறைந்துள்ளது. அதன்பிறகு, கனமழை காரணமாக கேரளா முழுவதும் பலத்த சேதங்கள் நிகழ்ந்தது. இந்நிலையில், கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 13 மாணவர்களுக்கு புதிதாக வைரஸ் என்ற நோரோ வைரஸ் தொற்று பாதிப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சிறப்பு ரயில்கள் சேவை நிறுத்தம் – ரயில்வே வாரியம் அறிவிப்பு!
விலங்குகளால் பரவும் இந்த நோரோ வைரஸ் அசுத்த நீர் மற்றும் உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. இந்த புதிய வகை நோரோ வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதிகளில் கடுமையான எரிச்சல் ஏற்படுகிறது. மேலும், இதனுடன் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே, மக்கள் தகுந்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பினால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.