இந்தியாவில் 40 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி – மத்திய அரசு ஷாக் தகவல்!
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி விட கூடாது என்று மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வரும் நிலையில், தற்போது வரை 40 பேருக்கு நாட்டில் புதிய வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய வகை தொற்று:
கொரோனா வைரஸ் தொற்று தானாக உருமாற்றம் அடைந்து பல்வேறு புதிய வகை வைரசை உருவாக்கி வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த தொற்றுகள் மூலம் மிகவும் அதிக அளவிலான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சீனா, ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் புதிய வகை வைரஸ்கள் மூலமாக மிகவும் தீவிரமான நிலை நிலவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!
இந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் மக்கள் மூலமாக தொற்று பரவி விடக் கூடாது என்று மத்திய அரசு, குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும், கொரோனா சோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும் என்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து வருகிறது.
ஆனால், கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேருக்கு புதிய வகை வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.