ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் புதுப்புது ட்விஸ்ட் – ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலில் பார்வதி, சுந்தரத்தின் உண்மையான மகள் இல்லை என்கிற சில முக்கிய விஷயங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் கதையில் சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
செம்பருத்தி சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘செம்பருத்தி’ கடந்த சில மாதங்களாக போரடிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்து வந்த நடிகர் கார்த்திக் ராஜ் சீரியலை விட்டு விலகியதும், பெரும்பாலான ரசிகர்கள் இந்த சீரியலை பார்ப்பதையே விட்டு விட்டனர். அதற்கு ஏற்றாற்போல செம்பருத்தி சீரியலின் கதைக்களமும் சொல்லும்படி அமையவில்லை. இது தவிர பல்வேறு கதாப்பாத்திரங்கள், நடிகர், நடிகைகளும் சீரியலை விட்டு மாற்றப்பட்டனர்.
HCL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தகுதி, பணி உள்ளிட்ட முழு விபரங்கள்!
அதனால் செம்பருத்தி கதையில் சில திருப்பங்களை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, நந்தினியின் மரணம், அகிலாண்டேஸ்வரியின் சிறைவாசம், ஐஸ்வர்யாவின் வில்லத்தனம் என மாறுபட்ட கதைக்களம் ஒளிபரப்பானது. இந்த காட்சிகளும் ரசிகர்கள் மனதில் ஒட்டாமல் இருந்து வந்த நிலையில், செம்பருத்தி சீரியலின் இயக்குனர் வேறு ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளார். அதாவது அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் மகள் தான் பார்வதி என கதையில் புதிய ட்விஸ்ட்டை அறிமுகம் செய்துள்ளார்.
அதாவது, அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் பரமேஸ்வரன் வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்து அந்த வீட்டில் இருந்து வெளியேறுகிறார். பின்னர், பரமேஸ்வரனின் மனைவி இறந்ததும், அவர்களுக்கு பிறந்த பார்வதியை சுந்தரத்திடம் கொடுத்து வளர்க்க சொல்லுகிறார். இதை தொடர்ந்து தற்போது பார்வதியை, அகிலாண்டேஸ்வரியிடம் சேர்த்துள்ள சுந்தரம் நடந்த உண்மையை சொல்லும்படி பரமேஸ்வரனிடம் கேட்கிறார். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் இதுவரை ஒளிபரப்பாகி இருக்கிறது.
இந்திய IT நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாள் வேலை முறைக்கு மாற்றம் – புதிய தகவல்!
இப்போது, பார்வதியை வேலைக்காரியாக நினைக்கும் அகிலாண்டேஸ்வரி உண்மை அறிந்ததும் பார்வதியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்வாரா, இல்லையா என்பது தான் வரும் வார எபிசோடுகளாக ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த புதிய கதைக்களம் ரசிகர்களை கவருகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போது செம்பருத்தி சீரியலின் புதிய திருப்பம் தொடர்பாக வெளியான ப்ரோமோக்களை கண்ட ரசிகர்கள், இந்த கதை நடிகர் ரஜினி நடித்துள்ள ‘முத்து’ திரைப்படத்தின் கதையை போல இருக்கிறது எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.