விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் திருப்பம் – மருத்துவமனையில் பார்வதியை பார்த்த குடும்பத்தினர்!

0
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் திருப்பம் - மருத்துவமனையில் பார்வதியை பார்த்த குடும்பத்தினர்!
விஜய் டிவி 'ராஜா ராணி 2' சீரியலில் திருப்பம் - மருத்துவமனையில் பார்வதியை பார்த்த குடும்பத்தினர்!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் திருப்பம் – மருத்துவமனையில் பார்வதியை பார்த்த குடும்பத்தினர்!

ராஜா ராணி 2 சீரியலில் திருமணம் முடிந்ததுமே பார்வதியை மர்ம கும்பல் கடத்தி சென்று விட்டது. பார்வதி மருத்துவமனையில் இருப்பதாக வீட்டிற்கு கால் வருகிறது. பார்வதியை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற குடும்பத்தினர்கள் பார்வதியை பார்த்ததுமே அதிர்ச்சியாகும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ராஜா ராணி சீசன் 2:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பார்வதியின் திருமணம் முடிந்ததுமே பார்வதியை ஒரு மர்ம கும்பல் கடத்தி சென்றுவிட்டது. விக்கியின் அப்பா தான் பார்வதியை காத்திருப்பாரோ என சந்தியாவுக்கு சந்தேகம் வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். ஆனால், விக்கியின் அப்பா பார்வதியை கடத்தியிருக்க வாய்ப்பே இல்லை என போலீசார்கள் விசாரணையின் பின்பு சொல்கிறார்கள். ஆனாலும், சந்தியா போலீசார் சொன்னதை நம்பலாம் கண்டுபிடிக்கலாம் என விட்டுவிடுகிறார்.

கண்ணம்மா மீது பாரதிக்கு வந்த புது அக்கறை – சீரியலில் இனி வரும் புது ட்விஸ்ட்!

இதற்கு நடுவே பார்வதியை கடத்தி வந்துள்ள செல்வம் பார்வதியிடம் உன் உடல் முழுக்க மனித வெடிகுண்டுகளை வைத்து திருவிழாவிற்கு அனுப்பி வைக்க போகிறோம். எங்களுக்காக நீ உயிர் தியாகம் செய்ய வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் பார்வதி அழுதபடி என் அண்ணனும், அண்ணியும் என்னை கண்டிப்பாக காப்பாற்றி விடுவார்கள். உன்னையும் உன் கும்பலையும் சும்மா விடவே மாட்டோம் என கூறுகிறார். உன்னை தேடி யார் இங்கு வந்தாலும் கொலை தான் விழும் என செல்வம் பார்வதியை மிரட்டி கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

பின்பு மருத்துவமனையில் பார்வதி இருப்பதாக சிவகாமியின் வீட்டிற்கு போன் வருகிறது. பார்வதிக்கு என்ன ஆகியிருக்கும், பார்வதி ஏன் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என குடும்பமே பயத்தில் உறைந்து போயிருக்கின்றனர். பின்பு சந்தியா தான் அனைவரின் மனதையும் தேற்றுகிறார். மருத்துவமனையில் இருந்து தானே போன் வந்தது. எதற்காக பயப்பட வேண்டும். பார்வதிக்கு எதுவும் ஆகியிருக்காது என ஆறுதல் சொல்லி அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது பார்வதியை குடும்பத்தினர்கள் பார்த்து உறைந்து போகும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!