தனக்கே தெரியாமல் கர்ப்பமாகும் முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீர் திருப்பம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் முல்லை அவருக்கே தெரியாமல் கர்ப்பமாக இருக்கிறார். அதெல்லாம் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை இருக்கிறது. புதுவிதமான கன்டென்ட் கொடுப்பதால் பலர் இந்த சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் பல ரசிகர்களை கொண்ட குடும்ப சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதிர் கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி மற்றும் குமரன் நடித்து வருகிறார். பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழத் தொடங்கிய காட்சிகள் எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
பாக்கியாவை ஏமாற்ற வேண்டாம் என கோபியிடம் கெஞ்சிய ராமமூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மேலும் முல்லையும் கதிரும் கணவன் மனைவியாக இருந்தாலும் காதலர்கள் போல அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாம் ரசிக்க வைப்பதாக இருக்கிறது. இந்நிலையில் முல்லைக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என மருத்துவர் சொன்னதால் குடும்பமே அதிர்ச்சியில் இருக்கிறது. ஆனால் எனக்கு முல்லை தான் முக்கியம் என கதிர் சொல்ல அவர்களது காதலை பார்த்து குடும்பமே சந்தோசப்பட்டது. முல்லைக்கு செயற்கை முறையில் குழந்தை பிறக்க டிரீட்மென்ட் எடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
மறுபக்கம் முல்லைக்கு பரிகாரம் ஒன்றை கஸ்தூரி செய்ய சொல்கிறார். முல்லை அதை செய்வதாக சொல்ல கதிர் வேண்டாம் என சொல்கிறார். ஆனாலும் முல்லை பிடிவாதமாக அந்த பரிகாரத்தை செய்ய போகிறார். ஆனாலும் அவரால் கர்ப்பமாக முடியாமல் இருப்பதால் முல்லை வருத்தமாக இருக்கிறார். இந்நிலையில் திடீரென முல்லைக்கு முடியாமல் போகிறது. அதனால் அவர் பரிசோதனை செய்து பார்க்க அவர் கர்ப்பமாக இருப்பதாக வருகிறது. அதை நினைத்து முல்லை சந்தோசமாக இருக்கிறார்.