கண்ணம்மாவை பழி வாங்க வெண்பாவை திருமணம் செய்துகொண்ட பாரதி – சீரியலில் புதிய திருப்பம்!
வெண்பாவை துர்காவிற்கு திருமணம் செய்துவைக்க ஷர்மிளா நினைக்கிறார். ஆனால்,பாரதி கண்ணம்மாவை பழி வாங்க வெண்பாவை திருமணம் செய்துகொள்வது போன்றும், குடும்பத்தினர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்வது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதிக்கு எப்போது தான் அனைத்து உண்மைகளும் தெரியவரும் எனவும், ஹேமா லட்சுமி என நான்கு பேரும் எப்போது ஒன்றாக ஒரே வீட்டில் சந்தோசமாக வாழ போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன தான் கண்ணம்மாவை விட்டு பாரதி தூரமாக போக நினைத்தாலும் பாரதியும் கண்ணம்மாவும் அடிக்கடி சந்திக்கும்படியான சூழல் தான் அமைகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது கூட பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் தான் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா,சீரியலில் புதிதாக அறிமுகமாகி இருக்கிறார். ஷர்மிளா வெண்பாவை விட வில்லியாக இருப்பார், வெண்பாவும் பாரதியும் திருமணம் செய்ய உதவி செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த சமயத்தில், எதிர்பாராத விதமாக வெண்பாவிற்கே எதிரியாக மாறி உள்ளார். அதாவது பாரதியையும் கண்ணம்மாவைவும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என நினைக்கிறார். பாரதியை எப்படியாவது நீ மறந்து விட்டு, நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள் என வெண்பாவை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
வெண்பாவும், ஷர்மிளாவுக்கு மிகவும் பயந்து கொண்டு தான் இருந்து வருகிறார். பாரதியை மறந்து விட்டு நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள் என வெண்பாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் வேலையில் இறங்கியிருக்கிறார். அதன்பின்பு வெண்பா இத்தனை நாளாக கடத்தி அடைத்து வைத்திருந்த துர்கா வெண்பாவிடம் இருந்து தப்பித்து வந்து ஷர்மிளாவிடம் நான் வெண்பாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் என கூறுகிறார். இவனை விட மிக சிறப்பான மாப்பிள்ளையை தேட முடியாது என துர்காவை வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இதற்குப் பிறகு. துர்காவும் வெண்பாவும் தான் திருமணம் செய்யப் போகிறார்களோ என எதிர்பார்த்த சமயத்தில் தற்போது பாரதி வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டுவது போன்ற ப்ரோமோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.