உன் கல்யாணத்துல என்னால சமைக்க முடியாது? வெகுண்டெழுந்த பாக்கியா – நடந்த தரமான சம்பவம்!
ரசிகர்களின் விருப்ப சீரியலாக டெலிகாஸ்ட் செய்யப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியாவிற்கு இக்கட்டான சூழ்நிலை ஒன்று உருவாகி உள்ளது. அதிலிருந்து பாக்கியா எவ்வாறு மீள போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.
பாக்கியலட்சுமி:
தன்னை ஏமாற்றியதால் தன் கணவரை சுயமரியாதைக்காக வேண்டாம் என நிராகரிக்கிறார் பாக்கியா. மேலும் தானாகவே முன்வந்து கோபிக்கு விவாகரத்தும் வழங்குகிறார். ஆனால் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் பாக்கியா தான் கோபியை பிரிந்ததற்காக கெட்ட பெயர் வாங்குகிறார். இது ஒருபுறம் இருக்க வீட்டு செலவுகளை சமாளிக்க பாக்கியா பெரிய திருமண சமையல் கான்ட்ராக்ட் ஆர்டர் ஒன்றை எடுக்கிறார்.
அது வேறு யார் திருமணமும் இல்லை.. கோபி ராதிகாவின் திருமணம் தான். இது தெரியும் பொழுது பாக்கியா இந்த ஆர்டர் வேணாம் என உதறி தள்ளுவரா.. அல்லது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமைக்க ஒப்புக்கொள்வாரா என பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
தமிழக அரசில் 4308 காலிப்பணியிடங்கள் – அக்டோபரில் நிரப்பப்படும் || அமைச்சர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ரசிகர்கள் பலரும் இவ்வளவு சுயமரியாதை உள்ள பாக்கியா கட்டாயம் இதற்கு ஒப்புக்கொள்ளக்கூடாது என கூறி வருகின்றனர். மறுசிலர் கோபி வேணாம் என்று ஆன போது எதை பற்றியும் கவலை படாமல் திருமணத்தில் சமைக்கலாம் என கூறுகின்றனர். பொறுத்து இருந்து பார்க்கலாம் பாக்கியா என முடிவு எடுக்கப்போகிறார் என்று.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்