திருமணம் முடிந்து 3 நாளில் விவாகரத்து கேட்ட ராதிகா.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் கோபி – “பாக்கியலட்சுமி” ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இன்றைய எபிசோடில் ராதிகா வேண்டும் என்றே பாக்கியாவை வம்பிழுத்து சிக்கலில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலையில் கோபியின் நண்பர் பாக்கியாவை மேடைக்கு அழைத்து கௌரவப்படுத்த அதனால் ராதிகா கோவத்தில் கோபியிடம் விவாகரத்து கேட்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியலில் கொடைக்கானலுக்கு ராதிகாவும் கோபியும் ஹனிமூன் வர, எதார்த்தமாக பாக்கியாவும் தனது குடும்பத்துடன் அங்கு வருகிறார். இந்நிலையில் பாக்கியாவை அடிக்கடி ராதிகா சீண்டி கொண்டே இருக்க, அதனால் கோவப்பட்ட பாக்கியா, நான் வேண்டாம் என தூக்கி போட்ட வாழ்க்கையை தான் நீங்க இப்போ வாழ்ந்து கொண்டு இருக்கீங்க என பதிலடி கொடுக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் குடும்பத்தில் அனைவரையும் கைக்குள் போட்டு உங்களுக்கு ஆதரவாக வைத்து இருக்கீங்க என ராதிகா சொல்ல, உடனே பாக்கியா, ஆமாம் அவங்க எல்லாரும் எனக்கு அன்பை கொடுக்கிறார்கள். அதனால் நான் அவர்களுடன் தான் இருப்பேன் என சொல்கிறார். இப்படி அடுத்தடுத்து ராதிகா அசிங்கப்படுகிறார். மறுபக்கம் அவார்ட் நிகழ்ச்சியில் கோபிக்கு அவார்ட் கொடுக்க அவர் ராதிகாவை மனைவி என நினைத்து பெருமையாக பேசுகிறார்.
வெளியான டிஎன்ஏ டெஸ்ட் முடிவு.. தலைகுனிந்து மன்னிப்பு கேட்ட பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியல் அப்டேட்!
Exams Daily Mobile App Download
ஆனால் விவரம் தெரியாத கோபியின் நண்பர் பாக்கியாவை மேடைக்கு அழைத்து பேச சொல்கிறார். அப்போது குடும்பத்தை பெண்கள் பார்த்துக் கொண்டதால் தான், ஆண்கள் அவார்ட் வாங்க முடிகிறது என பாக்கியா சொல்கிறார். பாக்கியா மேடையில் கெத்தாக பேசுவதை பார்த்து ராதிகாவுக்கு பயங்கர அவமானமாக இருக்கிறது. அதனால் அவர் அந்த கோவத்தை எல்லாம் கோபி மீது காட்டுகிறார். இனிமேல் அசிங்கப்பட முடியாது என்பதால் விவாகரத்து வேண்டும் என கோபியிடம் சொல்ல, அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். மூன்று நாளிலேயே விவகாரத்தா என பார்க்கும் ரசிகர்களுக்கும் இனி வரும் பாக்கியலட்சுமி தொடர் அதிர்ச்சியாகவே இருக்கப்போகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்