தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான புதிய பயிற்சி – அமைச்சர் அறிவிப்பு!
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு பயிற்சி அளிக்க இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாட்டுப்புற கலை:
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பலவிதமான புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியபடியே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நாட்டுப்புற கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கலை பண்பாட்டுக் கொண்டாட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாட்டுப்புற கலைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, தமிழகத்தில் இருக்கும் கலைகளின் வடிவத்தை கற்றுக்கொள்ள பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். மேலும், கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பன்னிசை, நாட்டுப்புறப்பாட்டு போன்ற கலைகளை மாணவர்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். இதற்காக நாட்டுப்புறக் கலைஞர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும், இந்த கலையானது மாணவர்களின் திறனை மேம்படுத்தும்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் புதிய திருப்பம் – பிரேத பரிசோதனை பற்றிய அறிவிப்பு
இதனால், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு கலை வடிவங்களை கற்பிக்க மாதிரி கால அட்டவணை உருவாக்கப்படும் எனவும், ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுதோறும் கலைத்திருவிழா நடத்தி அதற்கான பரிசு பொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதே போல சென்ற ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு 7 கலை வடிவங்களில் பரிசு பெற்றனர், அதே போல ஒவ்வொரு ஆண்டும் கலையில் மாணவர்கள் சிறந்துவிளங்க வேண்டும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.