திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய புதிய டோக்கன் முறை – அதிரடி அறிவிப்பு!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அங்க பிரதட்சணம் தரிசனத்திற்காக டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம்:
நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக கோவில் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள், சாமி ஊர்வலம் போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. மேலும் கோவில் நடை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் திறக்கப்பட வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. மக்கள் அதிகம் கலந்து கொள்ளும் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று குறைந்துள்ளதால் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – நாளை (ஜூலை 28) ஆன்லைன் மாதிரி தேர்வு!
அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இதற்கென பக்கதர்கள் வசதிக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் கோவில் நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு டிக்கெட்டுகள், சேவை டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் சர்வ தரிசனம் மூலம் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கோவில் நிர்வாகம் நாளை காலை இலவச அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் இணையம் மூலம் விநியோகிக்கப்படும் என்று கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் சென்ற மாதம் முதல் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இதற்கான டோக்கன்கள் இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு பல தரப்பினரிடம் இருந்து எதிருப்புகள் வந்த நிலையில் இதனை கண்டித்து கோவில் முன் அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதி காலை 11 மணி முதல் இதற்கான கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஆகஸ்ட் மாதத்தின் வெள்ளிக்கிழமைகள் தவிர அனைத்து தினங்களிலும் தலா 1500 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். இதில் பெண்களுக்கு 750 & ஆண்களுக்கு 750 என இலவச டோக்கன்கள் விநியோகிக்கப்படும். எனவே, பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்து பயன்பெறுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.