PF அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச்சட்டங்கள்!
மத்திய அரசு புதிதாக வருமான வரி சட்டங்களை மாற்றியுள்ளது. புதிய விதிகளானது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டங்கள்:
மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட் தாக்கத்தில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாற்றங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக PF கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈபிஎம். திட்டத்தில் முதலில் முதலீடு செய்யும் தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி இல்லை என்பது தான் முதலில் முக்கிய விஷயமாக இருந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த நிதியியல் சட்டம் 2021 ல் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – தரநிலைகளில் மாற்றம்!
அறிவிப்பின் படி ஈபிஎப் கணக்கில் வருடத்திற்கு 2.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு, அதற்கு மேல் செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இல்லை. 2.5 லட்சம் ரூபாய்க்குக் கூடுதலாகச் செய்யப்படும் முதலீட்டுக்கு, கிடைக்கும் கூடுதலான வருமானத்தை வருமான வரிக் கணக்கீட்டில் தனி பிரிவில் வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது வருமான வரிச் சட்டங்களை மாற்றியுள்ளது மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய சட்டத்தை அமல்படுத்த உள்ளது.
தமிழக அரசு வழங்கும் விருதுகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதிய வருமான வரி விதியில் வரம்பு ரூ. 2.5 லட்சம் அரசு சாரா ஊழியர்களுக்கு வரியில்லா பங்களிப்புகள் மீது ரூ. 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய விதி மாற்றம் மற்றும் கணக்கீட்டு முறையின் படி வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் வருடாந்திர முதலீட்டுக்கு எவ்விதமான வரியும் இல்லை. அதற்கு மேல் செய்யப்படும் முதலீட்டுக்கும் அதற்குக் கிடைக்கும் வரிக்கும் வருமான வரி உண்டு. வரியற்ற பங்களிப்புகளின் புதிய விதி, வரி செலுத்துவோர் தங்கள் வரிகளைக் கணக்கிடுவதற்கு உதவியாக இருக்கும், மேலும் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத பங்களிப்புகளைப் பிரிப்பதற்கும் உதவும்.