அனைத்து ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு – விரைவில் வெளியாக உள்ள புதிய திட்டம்!
மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர EPFO ஆணையம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக மேலும் விரிவான தகவல்களை பார்க்கலாம்.
புதிய மாற்றம்
இந்தியாவில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடியும் தருவாயில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு மாற்றியமைத்தது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் உள்ள பணியாளர்களுக்கு EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இதனை பெற இபிஎஸ் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த உறுப்பினருக்கு 58 வயது நிறைவடையும் போது ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும் இதில் 50 ஆண்டுகளுக்குப் பிறகோ அல்லது 58 வயதுக்கு முன்போ ஓய்வூதியத்தை பெற முடியும். அத்துடன் பணியில் இருக்கும் போது ஊழியர் இறந்தால் அவரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதிக்கு முன் இணைந்திருந்தால் ஓய்வூதியப் பங்களிப்புக்கான அதிகபட்ச மாதச் சம்பள வரம்பு ரூ.6500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச சம்பள வரம்பு 15,000 ஆக உள்ளது. இந்த 15000 ரூபாய் உச்ச வரம்பு என்பது குறைவான அடிப்படை சம்பளம் பெறுபவருக்கு அதிகமான அடிப்படை சம்பளம் பெறுபவருக்கும் பொருந்தும் என்பதால் குறைவாக ஊதியம் பெறுபவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அதிகமாக ஊதியம் பெறுபவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதாவது இப்போது ரூ.15,000 அல்லது அதற்கு மேல் ஊதியம் பெறுபவர் ரூ.1250 ஓய்வூதியத்திற்கு முதலீடு செய்கிறார்.
Exams Daily Mobile App Download
அதன்படி இவர்களுக்கு ஓய்வூதியமாக 7,500 ரூபாய் மட்டுமே பெற முடியும். அதனால் உச்ச வரம்பு நீக்கப்பட்டால் ரூ.15000க்கும் மேல் அடிப்படை சம்பளம் பெறுபவர்கள் தங்களுக்கு தேவையான ஓய்வூதிய பங்களிப்பை செலுத்தி கொள்ளவார்கள். அதன்படி தற்போது EPFO நிறுவனம் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியரின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பை விரைவில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.