தமிழக கல்லூரிகளுக்கு இன்னும் 10 நாட்களில் புதிய பாடத்திட்டம் – உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் தகவல்!
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி இன்னும் 10 நாட்களில் புதிய பாடத்திட்டங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்:
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் தரமான கல்வியை அளிக்கும் நோக்கிலும் அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு கலை கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்தது.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே பொறியியல் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்களும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் இன்னும் 10 நாட்களில் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
CBSE மாணவர்களின் கவனத்திற்கு.. தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து பேசிய அவர் சிறந்த அனுபவமிக்க பேராசிரியர்களை கொண்டு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டங்கள் குறித்து கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் தேவையான மாற்றங்களை செய்ய பல்கலைக்கழகங்களுக்கு 10 நாள் அவகாசம் அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.