தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்? முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் புதிய பாடத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரி:
தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் நேரடி முறையில் செயல்படத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது தொற்று குறையத் தொடங்கியதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 11ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கொரோனா கால இடைவெளியின் காரணமாக மாணவர்களிடையே கற்றல் ஆர்வம் குறையத் தொடங்கி விட்டது. மேலும் பள்ளி செல்லும் ஆர்வம் குறையத் தொடங்கியதாக பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் தொலைக்காட்சிகளில் கல்வி சேனல்கள் தொடங்கப்பட்டு அதன் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்க உதவியாக இருந்தது.
சீனாவில் புதிய வகை “லங்யா” வைரஸ் பரவல் – 35 பேர் பாதிப்பு! அச்சத்தில் மக்கள்!
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி முதல் தொடங்கியது. மேலும் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த 1.69 லட்சம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாட திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்படி மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டு பாடத்திட்டம் வரும் 17ம் தேதி இறுதி செய்யப்படும். இதனால், தமிழகத்தில் பொறியியல் கல்லூரியில் புதிய பாடத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.