TNPSC Group 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நடைமுறை, பாடத்திட்ட விபரங்கள் இதோ!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கான பாடத்திட்டம், நடைமுறை மற்றும் இன்னும் மற்ற செயல்முறைகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றது. அதில், குறைந்த கல்வித்தகுதியான 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு பணி வாய்ப்பை பெற்று தருவது குரூப் 4 தேர்வு மற்றும் VAO தேர்வாகும். முன்னதாக இரண்டு தேர்வுகளும் ஒன்றாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனித்தனியாக நடத்தப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக அரசு தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளதால் தேர்வுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிப்பு – மார்ச் 1 வரை கால அவகாசம்!
TNPSC குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பணிகளுக்கு பணியாளர்களை நியமிக்கிறது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இந்த தேர்விற்கு 18 முதல் 30 வயது வரை வயது வரம்பு இருக்க வேண்டும். ஒரே எழுத்து தேர்வின் மூலம் நியமனம் நடத்தப்படுகிறது.
மொத்தம் 200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். முதல் பகுதியான மொழிப்பாடப்பிரிவில் தமிழ் மொழியில் 100 வினாக்கள் கேட்கப்படும், அதில் ,தேர்ச்சி அடைந்தவர்களின் விடைத்தாள் மட்டுமே அடுத்த நிலையில் மதிப்பிடப்படும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு கலந்தாய்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள். குரூப் 4 தேர்விற்கு 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்கள் தான் பெரும்பாலும் கேட்கப்படும். சில நேரங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம்.