தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டம்! அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டு வருகிறது. அத்துடன் பொறியியல் படிப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. அதனால் தற்போது பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி அவர்கள் இது குறித்த அறிவிப்பை பேரவையில் கூறியுள்ளார்.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அவ்வப்பொழுது பொறியியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் கிடைப்பதில்லை. அதனால் மாணவர்களுக்கிடையில் பொறியியல் படிப்பை பயிலுவதில் ஆர்வமில்லாமல் உள்ளனர். அதன் விளைவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொறியியல் கல்லூரிகள் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. சில பொறியியல் கல்லூரிகள் நஷ்டத்தில் செயல்பட்டு வந்ததால் அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவித்தொகை நுழைவுத்தேர்வு!
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற பேரவையில் தற்போது ஒவ்வொரு துறை வாரியான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி இதில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த எண்ணிக்கையில் நடைபெறுகிறது. அதனால் இதனை தடுக்கும் விதமாக அரசு மேற்கொள்ள நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த பதிலுரையை பற்றி பார்ப்போம்.
Exams Daily Mobile App Download
பேரவையில் அமைச்சர் கூறியதாவது, தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி பொறியியல் படிப்புகளில் புதிய பாடத்திட்டத்தை கொண்டுவர உள்ளதாகவும் பேரவையில் கூறியுள்ளார்.