திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவியின் புதிய சீரியல் – காரணம் இதுவா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “வைதேகி காத்திருந்தாள்” சீரியல் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் குறைவான TRP காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
வைதேகி காத்திருந்தாள்:
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் புதிதாக பல சீரியல்கள் தொடங்கப்பட்டன. ஆனால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களுடன் இந்த புதிய சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. மாறுபட்ட கதையுடன் புதிய சீரியல்கள் தொடங்கப்பட்டாலும், ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் விறுவிறுப்பு அதிகமாக இருப்பதே அந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.
சர்ச்சையில் சிக்கிய ‘பிக் பாஸ்’ வனிதா மூத்த மகளின் துணிச்சல் – வியப்பில் ரசிகர்கள்!
இந்நிலையில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட “வைதேகி காத்திருந்தாள்” சீரியல் தொடங்கிய நாள் முதல் TRPயில் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இந்த சீரியல் ஹீரோவாக நடிகர் ப்ரஜின் நடித்து வந்தார். மேலும் கதாநாயகியாக நடிகை சரண்யா நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ப்ரஜின் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அவருக்கு பதிலாக நடிகர் முன்னா களமிறங்க இருப்பதாக ப்ரோமோ வெளியானது.
விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஒளிபரப்பு நேர மாற்றம்!
அதனை தொடர்ந்து இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஏற்கனவே விஜய் டிவி-யின் ராஜபார்வை சீரியலில் நடித்திருந்தார். வைதேகி காத்திருந்தாள் சீரியலில் முன்னா நடிக்க ஆரம்பித்து ஒரு வாரமே ஆன நிலையில் தற்போது அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருக்கிறது. மிகக் குறைந்தளவு டி.ஆர்.பி ரேட்டிங் காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய சீரியல் தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில் முடிவடைந்து இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.