தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை ரத்து – இதற்காக தான்? அரசு விளக்கம்!

0
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை ரத்து - இதற்காக தான்? அரசு விளக்கம்!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை ரத்து - இதற்காக தான்? அரசு விளக்கம்!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை ரத்து – இதற்காக தான்? அரசு விளக்கம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் எழுத்தறிவித்தல் திட்டத்தை துவங்க இருக்கும் நிலையில் இதற்கான பயிற்சி வகுப்புகளை முடிப்பதற்காக ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை நேற்று (ஜூன் 6) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எழுத்தறிவித்தல் திட்டம்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் 14ம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 13ம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை தாமதமாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பெரும்பாலான பள்ளிகளில், மே 20ம் தேதி வரை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் இருந்தனர்.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு! உடனே பாருங்க!

இந்த ஆசிரியர்களுக்கு மே 20 முதல் ஜூன் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மே 20 முதல் தற்போது வரை இரண்டு வார விடுமுறையில் இருந்த ஆசிரியர்களுக்கு இப்போது திடீரென விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள் நேற்று (ஜூன்.6) முதல் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு எழுத்தறிவித்தல் திட்டம் துவங்கப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் 200 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்டுள்ள எண்ணும், எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் ஜூன் 13ம் தேதியன்று துவக்கி வைக்க இருக்கிறார். இந்த திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி முடிப்பதற்காக ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கான கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!