ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் – மத்திய அரசு விளக்கம்!
தமிழகத்தில் ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசு புதிய வழிமுறையை அறிவித்துள்ளது. மேலும் ரேஷன் கார்டு அப்டேட் செய்யவும் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு:
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மலிவான விலையில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழக அரசின் மூலம் கிடைக்கும் சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக விளங்குகிறது. இந்த ரேஷன் கார்டு மக்களின் வருமானத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு நிறங்களில் வழங்கப்படுகின்றன.
மதுரை விமான நிலையத்தில் இரவிலும் விமான சேவை? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அதிகமான ஊழல் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு தனி கண்காணிப்பு பிரிவினை ஏற்படுத்தி கவனித்து வருகிறது. இதை தவிர ரேஷன் கடைகளில் வை பை இணையதள வசதியினை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் கார்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும், ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் மாற்றம், நீக்கம், உள்ளிட்ட தகவல்களை மாற்றுவதற்கு எளிய வழிமுறைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொது சேவை மையங்கள் அமைப்பும், உணவு, மற்றும் பொது விநியோக துறையும் சேர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 3.70 லட்சம் பொது சேவை மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள் தங்கள் ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண முடியும். இதன் மூலம் சுமார் 23.64 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் ஆதார் இணைப்பும், டூப்ளிகேட் ரேஷன் கார்டும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.